Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வேறெங்கும் இல்லாத புதுமையாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி துவங்கும் நாளில் எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் 2023–24 புதிய கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளில் பள்ளியின் வாசலில் பலூன் தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தம் புது பட்டாம் பூச்சிகளாகப் பறந்து வருகின்ற எல்.கே.ஜி. குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி; மழலைச்செல்வங்களுக்கு மலர் மாலை அணிவித்தார். மாணவர்களே ரிப்பன் வெட்டி முதல் நாள் பள்ளியில் அடியெடுத்து வைத்தனர். ஆசிரியர்கள் பூங்ககொத்து, சாக்லேட், பஞ்சுமிட்டாய் மற்றும் புதிய வாட்டர் பாட்டில் கொடுத்து ஆராத்தி எடுத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் இன்முகத்துடன் வரவேற்றனர். குழந்தைகளுக்கு சாக்லேட்டுகள் மற்றும் பஞ்சுமிட்டாய்கள் வழங்கப்பட்டன. சவ்வு மிட்டாயில் குழந்தைகளுக்கு கடிகாரம், மோதிரம் போன்றவைகளை செய்து வழங்கியது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. குழந்தைகளை ‘மிக்கி மௌஸ் பொம்மைகள்’ கைகுலுக்கி வகுப்புக்கு அழைத்துச்சென்றன. விழாவில் பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளாகள்; கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார் காசாவயல் கண்ணன், மற்றும் ஆசிரியப்பெருமக்கள் கலந்துகொண்டு முதல் நாள் பள்ளிக்கு வந்த மழலைச் செல்வங்களை வரவேற்று வாழ்த்தினார்கள்.