Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 76 ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் விழாவில் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுதந்திரதின உரை நிகழ்த்தினார்கள். தேசபக்திப் பாடல்கள் பாடினார்கள். மூவர்ணக்கொடி தன் வரலாறு கூறுவது போல கவிதை வாசித்தனர். தமிழில் பேசிய தாரிகா என்ற மாணவி இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கின்ற முதல்வர் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என சட்டமன்ற உறுப்பினரைக் கேட்டுக்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. சுதந்திர தின விழிப்புணர்வு பாடல்களுக்கான நடனம் காண்போnரைக் கவர்ந்தன. சிறப்பு விருந்தினர் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா பேசும் போது இந்த பள்ளி விழாவில் முழுவதும் மாணவர்களே ஒருங்கிணைத்து விழாவை நடத்துகிறார்கள் என்று சொன்னார்கள். நானும் கவனித்திருக்கிறேன். எங்கு நடக்கின்ற விழாவாக இருந்தாலும்; வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் அதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டுகின்றேன். இங்கே எங்களைப் போன்றவர்களை அழைத்து பேச வைப்பதன் நோக்கம் மாணவர்கள் நீங்கள் உழைப்பால் உயர்ந்து சமூகத்தில் பெரிய மனிதர்களாக விளங்கவேண்டும். உழைப்பால் உயர்ந்தவர்களை ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்” என்று குறிப்பிட்டார். “ நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கப்பட்டது. பள்ளியில் எல்.கே.ஜி. தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நினைவுப்பரிசுகளை சிறப்பு விருந்தினர் ராஜகுமாரி முத்துராஜா வழங்கினார். பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதா மூர்த்தி அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி வரவேற்க, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கௌதம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், அண்ணாமலை, கல்வித்துறை வெங்கடகிருஸ்ணன், மகாத்மா ரவிச்சந்திரன், துரைமணி, பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி பிள்ளை, மற்றும் மேலாளர் ராஜா ஆசிரியர்கள் காசாவயல்கண்ணன், உதயகுமார், ராமன், நீலகண்டன், ஆனந்தி, சுமதி, விசாலி மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டர். நிகழ்ச்சியை ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் அஅ.அட்சயா ஸ்ரீ, நிகிதா ஸ்ரீ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.