Loading Events
  • This event has passed.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் தமிழ் நாட்டிலேயே முதன்முதலாக பள்ளியில் வாசிப்போர் மன்றம் துவங்கி நடைபெற்று வருகின்றது. வாசிப்பேர் மன்றத்தின் ஐந்தாவது கூட்டம் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பிறந்த நாள் சிறப்பு வாசிப்போர் மன்றமாக நடைபெற்றது. கூட்டத்தில் மாணவர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளை விமர்சனம் செய்து பேசினர். கூட்டத்திற்கு வாசிப்போர் மன்றத் தலைவர் மாணவி அட்சயா ஸ்ரீ தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை க. உஷா நந்தினி கலந்துகொண்டார். வாசிப்போர் மன்றத்தில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை நூல்களை வாசித்து மாணவர்கள் உரை நிகழ்த்தினர். “கூடு திரும்புதல் எளிதன்று” எனும் தலைப்பில் மதுஸ்ரீ அ.அ. அதியன், ”தேவதைகளால் தேடப்படுபவன்” என்ற தலைப்பில் சர்விகா, மோகித் கிஷோர், “மழையின் கையெழுத்து” என்ற கவிதைத் தொகுப்பை ஹரி யுகாஷ் என்ற மாணவனும், “என் பண்டிகை நாட்குறிப்பு” எனும் புத்தகத்தை கவிசாகர், மற்றும் கனிஸ்கா ஆகியோரும், “தங்கம் மூர்த்தி கவிதைகள்” எனும் நூலை கௌசிக் மற்றும் பொய்யெனப் பெய்யும் மழை” எனும் தலைப்பில் லோகித் என்ற மாணவரும் சிறப்பாக உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமுஎகச நகரப் பொருளாளரும், கவிஞர் தங்கம் மூர்த்தி கவிதைகளை முனைவு பட்ட ஆய்வு செய்யும் பேராசிரியை உஷா நந்தினி பேசும்போது “இங்கே ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதைகளை வாசித்து அவர்கள் பார்வையில் விமர்சனம் செய்தனர். கவிதையின் மீது அவர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் மட்டுமல்ல பாடப்புத்தகங்களைத் தாண்டி பல்வேறு நூல்களை வாசிக்த் தூண்டுகின்ற பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலே காரணமாகும். இந்த வயதிலேயே கவிதைகளை விமர்சனம் செய்பவர்கள் வருங்காலங்களில் சிறப்பான நிலைக்கு உயர்வார்கள்” என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, கோமதி, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக வாசிப்போர் மன்ற துணைச் செயலாளர் மாணவி பவித்ரா வரவேற்க, செயலாளர் ஷீபா நன்றி கூறினார். நிகழ்வை தணைத்தலைவர் மாணவி உதயரிஷனியா தொகுத்து வழங்கினார்.