Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் T.K.லில்லி கிரேஸ் அவர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர்

காமராசர் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து காமராசர் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.