Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துவக்க நாளில் மழலைக் குழந்தைகளுக்கு மாலையணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி நுழைவு வாயிலில் பலூன் மற்றும் பனையோலை தோரணங்கள் கட்டப்பட்டு முதல் நாள் பள்ளிக்கு வரும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதோடு புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ள மழலைக்குழந்தைகளுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாலையணிவித்து அவர்களுக்கு இனிப்பு; மற்றும் பலூன்கள் வழங்கி வரவேற்றார். முதல்நாள் பள்ளிக்கு வந்த குழந்தைகள் அவர்களுக்கான குளிருட்டப்பட்ட வண்ணவண்ண பொம்மைகள் வரையப்பட்ட வகுப்பறைகளுக்கு ஆசிரியர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். மேலும் விளையாட ஆர்வமான குழந்தைகள் “ஊஞ்சல், கைப்பந்து, “உள்ளே வெளியே”ஆகிய குழந்தைகளுக்கான விiளாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி மகிழ்ந்தனர். முதல் நாள் பள்ளி வருகையை மழலைக்குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.