Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு மழலைக்குழந்தைகள் கூட்டங்கூட்டமாக கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து வந்தனர். பள்ளிக்கு வந்த கண்ணனும் ராதையும் மாறிமாறி வெண்ணெயை பறிமாறிக்கொண்டனர். கண்ணன் ராதை வேடமணிந்த குழந்தைகள் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.