Loading Events
  • This event has passed.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது. மழலைவகுப்பு மாணவர்கள் ஏஞ்சல் உடையில் பள்ளிக்கு வந்தனர். எல்லா வகுப்புக்கும் சென்று இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். ஏஞ்சல்கள் இரக்கமுடையவர்கள். பிறருக்கு தானே முன்வந்து உதவக்கூடியவர்கள். அன்பானவர்கள் என்ற அடிப்படையில் வளரும் குழந்தைகளிடம் இதுமாதிரி பண்புகளை வளர்க்கும் விதமாகவே ஏஞ்சல்கள் தினம் கொண்டாடப்பட்டது.